Talyr

Old and New Tamil Song Lyrics. Ta Lyr stands for Tamil Lyrics. Serving music lovers since 2007. Served 2.9 million visitors so far.

  • Articles
    • Kathaigal
    • Kavithaigal
    • Katturaigal
  • Music Director
    • M.S.Viswanathan Hits
    • Ilayaraja Hits
    • A.R.Rahman Hits
  • Events
    • Patriotic Song Lyrics
    • Pongal Songs Lyrics
  • Genre
    • Devotional Songs Lyrics
    • Carnatic Songs Lyrics
    • Gaana Songs Lyrics
    • Sentimental Songs Lyrics
    • TV Serial Song Lyrics
  • Old Songs
  • 70’s-90’s
  • Latest Lyrics
  • About

Sindhanaigal – மனம் (மணம்) மகிழட்டும்

October 3, 2014 by Talyr Admin Leave a Comment

Tamil articles

Sindhanaigal:

அது ஒரு திருமண மண்டபம். முகூர்த்த நேரம் முடிந்ததும் மன மகள் வீட்டார் தங்கள் உறவுகளுக்கு, பதில் பரிசு (Return Gift) கொடுத்து கொண்டிருந்தார்கள்.

பெரிய ஹாலில் பல வித Gift பொருட்கள் வைத்துக்கொண்டு உறவுகளை அழைத்து கொடுக்க ஆரம்பித்தார்கள்.

தவறல்ல.

ஆனால் அவர்களின் செயல் பலரையும் வருந்த வைத்து விட்டது.

அதாவது உறவில் வித்தியாசம் காட்டியதோடு நில்லாமல் வசதியானவர்களுக்கு உயர்ந்த gift ம் அடுத்தடுத்து வகைக்கு ஏற்ப பிரித்து தந்து கொண்டிருந்தார்கள். ஒரு சாதாரண நிலை உறவினர் கையில் ஜாக்கெட் பாக்கெட்டுடன், உணர்வால் அடிபட்டு வெளியேறியது பார்க்க மிக பாவமாக இருந்தது.

இலட்சங்களில் செலவு செய்து கல்யாணம் செய்பவர்களே கொஞ்சம் யோசியுங்கள். மிக வேண்டியவர்களுக்கு தனியாக உங்கள் வீட்டிலோ, அவர்கள் வீட்டிலோ மரியாதை செய்து கொள்ளுங்கள். இது போன்ற பொது நிகழ்வுகளில் கூடியவரையில் ஒரே போன்ற gift ம் பார்சலும் செய்து உளமார, மனமார்ந்த நன்றியுடன் உறவுகள் எப்படி பட்டவராயினும் வித்தியாசம் காட்டாமல் சிரித்த முகத்துடன் வழியனுப்புங்கள்.

உங்கள் அழைப்பை ஏற்று வருகை தருபவர்கள் மனம் நொந்து போவானேன்? உறவுகளுடன் கலக்கவும், சந்தித்து மகிழவும் தானே வருகிறார்கள். அவர்களின் வாழ்த்தும் வாழ்த்துக்கள் தானே?

தயவு செய்து யோசியுங்கள்.தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.

மண நிகழ்வுகளில் மனம் அடிபட செய்யலாமா?

பி ப சுந்தர்.
ஹைதராபாத்

Filed Under: articles Tagged With: P B Sundar

Tamil Lyrics – Sentamil Naadenum Pothinile (In Tamil Font)

September 21, 2014 by Talyr Admin 10 Comments

Sentamil Naadenum Podhinile Song Lyrics

Lyrics in English Font:

Sentamil Nadenum Bodhinilae
Inba Thaen Vandhu Paayudhu Kaadhinilae
Engal, Thandhaiyar Nadendra Pechinile
Oru Sakthi Pirakkudhu Moochinilae

Vedham Niraindha Tamilnadu 
Uyar Veeram Serindha Tamilnadu
Nalla Kaadhal Puriyum Arambaiyar Pol 
Ilan Ganniyar Soozhndha Tamilnadu

Kaaviri Thenpennai Paalaaru
Tamil Kandadhor Vaigai Porunai Nadhi
Ena Meviyayaaru Palavoda Thiru
Meni Sezhiththa Tamilnadu

Muththamil Mamuni Neelvaraiye Nindru
Moimburak Kaakkun Tamilnadu
Selvam Eththanaiyundu Puvimeedhe Avai
Yaavum Padaiththa Tamilnadu

Neela Thiraikkadalorathile Nindru
Niththam Thavanchei Kumari Ellai 
Vada Maalavan Kundram Ivattridaiye Pugazh
Mandi Kidakkun Tamilnadu

Kalvi Sirandha Tamilnadu Pugazh
Kamban Pirandha Tamilnadu
Nalla Palvidhamaayina Saathiraththin
Manam Paarengum Veesun Tamilnadu

Valluvan Thannai Ulaginukke
Thandhu Vaanpugazh Konda Tamilnadu
Nenjai Allum Silappadhikaaramendror
Mani Yaaram Padaiththa Tamilnadu

Singalam Putpagam Saavag Maadhiya
Theevu Palavinunchendreri
Angu Thangal Pulikkodi Meenkodiyum
Nindru Saalpurakkandravar Thaai Naadu

Vinnai Idikkum Thalai Imaiyam
Enum Verppai Yadikkum Thiranudaiyaar
Samar Pannik Kalingath Thirulkeduththaar
Tamil Paarththivar Nindra Tamilnadu

Seena Misiram Yavanaragam
Innum Desam Palavum Pugazh Veesi
Kalai Nyaanam Padaithozhil Vaanibamum
Miga Nandru Valarththa Tamilnadu

 

Lyrics in Tamil Font:

செந்தமிழ் நாடெனும் போதினிலே 
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு
உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு 
நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் 
இளங்கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு 
தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி
என மேவிய யாறு பலவோடத் 
திருமேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே
நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு 
செல்வம் எத்தனையுண்டு புவிமீதே
அவையாவும் படைத்த தமிழ்நாடு

நீலத் திரைக்கட லோரத்திலே
நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை
வடமாலவன் குன்றம் இவற்றிடையே 
புகழ்மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு 
புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு 
நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் 
மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே 
தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு 
நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் 
மணியாரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவக 
மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி 
அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் 
நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை யிடிக்கும் தலையிமயம்
எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் 
சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் 
தமிழ்ப்பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் 
இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக்
கலை ஞானம் படைத் தொழில் வாணிபமும்
மிக நன்று வளர்த்த தமிழ்நாடு

 

 

Filed Under: Bharathiyar, Kavithaigal, Melody, tamil old songs Tagged With: lyrics in tamil, Patriotic

A Tribute To Kappaloattiya Tamizhan – V.O.Chidambaram Pillai

September 8, 2014 by Talyr Admin Leave a Comment

A Tribute to one of our heros from Tamil Nadu

கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
இன்று.  விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய
பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில்
பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில்
வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு
இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின்
விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில்
வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை ‘வந்தே மாதரம் பிள்ளை ‘ என்று
அழைத்தார்கள் தலைவர்கள்.

இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில்
தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி
உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ்
கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார்.
ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து
கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா
எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று “எஸ்.
எஸ். லாவோ” கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம்
பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும்
குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று
அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது

தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில்
கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்
வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல்
ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார்.
விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது
தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு
விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர்
வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால்
அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து
ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி
ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி
ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு
மசியவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே  சிதம்பரம்பிள்ளையின்
பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்
பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்
விடுதலை பெறும்” என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்
முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து
புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த
கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்
நோவதுவுங் காண்கிலையோ?’
என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார். விடுதலைபெற்று
வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு.

அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை
வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,”இந்நூலின்
எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !” என்று குறிப்பிட்டார்.
சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார்.
மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார்.

அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக
தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை
நீங்காமலே வாழ்ந்து  தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர்
மகாகவி பாரதியின் “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின்
மோகம்? ” என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய இதே தினத்தில்
உயிர் துறந்தார்.

– பூ.கொ.சரவணன்

 

Source: http://news.vikatan.com/article.php?module=news&aid=32056

 

Filed Under: articles Tagged With: articles

Good to know – Drink more water!

September 7, 2014 by Talyr Admin Leave a Comment

தெரிந்துகொள்வோம் : (An article about the benefits of drinking water)


தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் …!

1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்…!

Filed Under: articles Tagged With: articles

Search Talyr

Popular Songs

  • Vaadagai Koodu – Lyrics – Nalanum Nandhiniyum
  • Hara Hara Sivane Arunachalane – Nama Shivaya Lyrics in Tamil
  • Muthai Tharu Pathi Thirunagai Lyrics in English and in Tamil – Arunagirinadhar
  • Tamil Lyrics – Sentamil Naadenum Pothinile (In Tamil Font)
  • Paattum Naane Baavamum Naane Song Lyrics With Jadhi – Thiruvilayadal

Your Pick:

  • A M Rajah
  • articles
  • Bharathiyar
  • Devotional
  • Gaana
  • ilayaraja
  • K V Mahadevan
  • Kavignar Kannadasan
  • Kavithaigal
  • love songs
  • Melody
  • MSV
  • Philosophical Songs
  • recent
  • Sad
  • story
  • T M S
  • Tamil Font
  • tamil new songs
  • tamil old songs
  • Vaali
  • Vairamuthu

Most Viewed Posts

  • Vaadagai Koodu – Lyrics – Nalanum Nandhiniyum
  • Hara Hara Sivane Arunachalane – Nama Shivaya Lyrics in Tamil
  • Muthai Tharu Pathi Thirunagai Lyrics in English and in Tamil – Arunagirinadhar
  • Tamil Lyrics – Sentamil Naadenum Pothinile (In Tamil Font)
  • Paattum Naane Baavamum Naane Song Lyrics With Jadhi – Thiruvilayadal

Golden Collections

  • Articles
    • Kathaigal
    • Kavithaigal
    • Katturaigal
  • Music Director
    • M.S.Viswanathan Hits
    • Ilayaraja Hits
    • A.R.Rahman Hits
  • Events
    • Patriotic Song Lyrics
    • Pongal Songs Lyrics
  • Genre
    • Devotional Songs Lyrics
    • Carnatic Songs Lyrics
    • Gaana Songs Lyrics
    • Sentimental Songs Lyrics
    • TV Serial Song Lyrics
  • Old Songs
  • 70’s-90’s
  • Latest Lyrics
  • About

Copyright © 2022 · News Pro Theme on Genesis Framework · WordPress · Log in